முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆதிக்கம் ஓங்க


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இவ்விடத்தில், பிரச்சனைகள் அனைத்துக்குமான தீர்வு இதன் மூலம் உருவாகுமா என்றொரு கேள்வியை நம்மை நோக்கி நாம் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
சாத்தியமற்ற, தேவையில்லாத செயல்பாடுகள் நம் நேரத்தையும் பொருளாதாரத்தையும் வீணாக்குவதோடு மட்டுமல்லாமல், சரியான திசை நோக்கி பயணிப்பதிலிருந்து நம்மை வெகுதூரத்துக்குக் கொண்டு சென்றுவிட்டுவிடும் அபாயமும் அதில் உள்ளது.
எனவே, பயணத்தைத் துவக்கும் முன்னரே அது சரியான திசை நோக்கிய பயணம்தானா என்பதை நாம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
"அமைதியான, பயமில்லாத, மகிழ்ச்சியான வாழ்வு" என்பதே ஒவ்வொரு மனிதனின் இவ்வுலகத் தேவையாக இருக்கும்.
மனிதனின் இத்தேவைக்கு மிகப் பெரும் சவாலாக விளங்குபவை தீய சக்திகள்!
இந்தியாவைப் பொறுத்தவரை தீய சக்திகளின் ஆதிக்கம் தலைவிரித்தாடும் சூழலில் வாழ்ந்து வருகிறோம்.
தீய சக்திகளின் ஆதிக்கம் ஓங்க, ஓங்க மக்களும் அத்தீய சக்திகளின் கட்டுப்பாட்டில் கட்டுண்டு, தாமும் தீயவர்களாக மாறிப்போகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை மக்களுக்கு எதிரான, நாட்டுக்கு எதிரான தீய சக்திகளில் பிரதானமானதான இந்துத்துவ ஃபாசிஸம் நாட்டை முழுவதும் ஆக்ரமித்துக் கொள்வதற்கான செயல்திட்டங்களில் முழு மூச்சுடன் செயலாற்றி, இன்று குறிப்பிட்ட அளவு மக்களையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
அதற்காக அது கையாண்ட வழிமுறையில் மிக முக்கியமானது, ஹிந்துத்துவ மனுதர்ம சித்தாந்தத்துக்கு எதிரான இந்திய ஜனநாயக கட்டமைப்பைத் தம் பிடிக்குள் கொண்டு வந்ததுதான்.
இந்தியாவைப் பொறுத்தவரை, அரசைத் தாங்கிப் பிடிப்பவை
1. சட்டத்துறை(மக்களவை, ராஜ்யசபை, சட்டமன்றம், ஜனாதிபதி)
2. நிர்வாகத்துறை(பாதுகாப்பு, பொருளாதாரம், கல்வி....)
3. நீதித் துறை(உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள்...)
4. ஊடகத் துறை
இந்திய தேசியக்கொடியையோ அரசியலமைப்பு சட்டாத்தையே ஏற்றுக்கொள்ளாத இந்துத்துவம், இந்த நான்கையும் முழுமையாக தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் திறமையாக செயல்பட்டு, நூற்றாண்டுகால வெற்றியினை இன்று பெற்றுள்ளது.
முழுமையாக இந்தியாவை ஆக்ரமித்துள்ள இத்தீய சக்தியை ஒழிக்கவேண்டுமெனில், இந்தியக் குடிமக்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்திய அரசமைப்பின் தூண்களான இந்நான்கு துறைகளிலிருந்து இவற்றை ஒடுக்குவதும் அவற்றைக் கையகப்படுத்துவதும் மட்டுமே அதற்கான தீர்வாக அமையும்.
இத்தீர்வினை நோக்கிப் பயணிக்க வேண்டுமெனில்,
இவற்றினுள் நுழைய வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Youtube மூலம் ஊடக பணியை தொடங்குவது எப்படி ? பணம் சம்பாதிப்பது எப்படி?

முஸ்லிம் இளைஞர்களே ! உங்களிடம் சமுதாய சிந்தனை இருக்கா ? உங்களிடம் பேச்சாற்றல் இருக்கா ? உங்களுக்கு பணம் சம்பாதிக்கனுமா ? அனைத்துக்கும் ஒரே விடை Youtube. ஊடக துறையில் நாம் இல்லை  நாம் இல்லை என்று சொல்லிகொண்டுருந்தால் மட்டும் போதாது அதற்க்கான முயற்சியை தொடங்க வேண்டும். எப்படி? Youtubeகும் ஊடகத்துறைக்கும் என்ன தொடர்பு ? இருக்கு ,இனி எல்லாமே Youtube தான்  Youtube ஐ நாம் இணையத்தின் டிவி என்று சொல்லலாம். மிகப் பிரபலமான இந்த தளத்தில் கிடைக்காத வீடியோக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வளவு வீடியோக்கள் உள்ளன. ஒரு நிமிடத்தில் சராசரியாக 48 மணிநேர வீடியோ Youtube தளத்தில் Upload செய்யப்படுகிறது. இதை ஒரு டிவி சேனல் என்று வைத்தால் இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்படும் பத்தாவது மிகப் பெரிய சேனல் இது. இவ்வளவு பெரிய தளத்தில் சாதாரணமானவர்களும் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் நம்புவீர்களா? அது தான் உண்மை.  எப்படி என்று பார்ப்போம். முதலில் இதற்கு என்ன தேவை என்று சொல்லி விடுகிறேன்.   பேச்சாற்றல் இருக்கவேண்டும் . அவ்வளவு தான். உடன் ஒரு கேமரா இருந்தால் போதும். பேச்சாற்...

வம்சாவழி சொல்லிதாருங்கள்

முஸ்லிம்களே , உங்களுக்கான சின்ன கேள்வி அரபியர்கள் தங்களது வம்சாவழியை தெரிந்துகொள்ள அவர்களது பெயர்களை மனனம் செய்து சொல்கிறார்கள் சிறுவர்களை அடித்தாவது மனனம் செய்ய சொல்கிறார்கள் .அவர்களது வம்சாவழி பெயர்களை ஒரு புத்தகங்களில் பேணி பாதுகாக்கிறார்கள் . இப்போ உங்களிடம் ஒரு கேள்வி ,உங்களது வம்சாவழி தொடரை சொல்லுங்கள் பார்ப்போம் ... மிஞ்சி மிஞ்சி போனா நான்கு தலைமுறையை நம்பலால்  சொல்ல முடியும் அதற்க்கு மேல் முடியாது ... அந்த நான்கு தலைமுறையையாவது உங்கள் குழந்தைகளை மனனம் செய்ய சொல்ல சொல்லுங்கள் . இன்னார் குடும்பப்பா ? இன்னார் வீடு ? என்று பட்டை பெயர் உண்டு அந்த பட்டை பேரின் விளக்கத்தையும் நம் குடும்ப வரலாறையும் சொல்லி கொடுங்கள் பிள்ளைகளுக்கு ...