முல்லை பெரியாறு அணை கட்டுவதற்கு உதவிய ஆங்கூர் ராவுத்தர் பெயர் இன்றும் வரலாற்றில் தேனி மக்கள் மனதிலும் இருக்கிறது அப்படியான வரலாற்றில் யார் இந்த ஆங்கூர் ராவுத்தர் என்று படிப்போம்.... ஆங்கூர் இராவுத்தர் அவர்கள் திருவிதாங்கூரில் குடியேறி பல்வேறு வனப் பொருட்களை வர்த்தகம் செய்த ஒரு செல்வாக்குமிக்க நிலப்பிரபுத்துவ முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பூர்விகம் தமிழ்நாட்டின் ராஜபாளையம் ஆகும். ஆங்கூர் நைனார் ராவுத்தரின் தந்தை மீராவூ ராவுத்தர் ஆவார். 1861 வாக்கில் குமிளி மற்றும் பீர்மேடு வழியாக பாக்கு மற்றும் மிளகு வர்த்தகத்தில் மெட்ராஸ் மற்றும் திருவிதாங்கூரில் செல்வாக்குமிக்க வர்த்தகராக இருந்தார். மீராவூ ராவுத்தருக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர். அவர்கள் சி. ஏ. முகமது நைனார் ராவுத்தர், சி. ஏ. அசனுக் கனி ராவுத்தர், சி. ஏ. ஆங்கூர் நைனார் ராவுத்தர் மற்றும் அனுமந்தம்குடி சி. ஏ. மீரா ராவுத்தர். அவர்களில் இரண்டு சகோதரர்களும் திருவிதாங்கூரில் வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். மற்ற இருவரும் அரசியல் பதவிகளில் இருந்தவர்கள். ஆங்கூர் நைனார் ராவுத்தர் அல்லது ஆங்கூர் ராவுத்தர் ஆங்கூர் நைனார் ர...
#ஆயிரம்_ஆண்டு_கால_குர்ஆன்! #திருச்சியில்_ஒரு_வரலாற்று_ஆவணம்! .......................................... மு.தமிமுன் அன்சாரி .......................................... அரபு மண்ணில் உதித்த இஸ்லாம், இந்தியாவுக்கு முதலில் தென்னிந்தியாவின் வழியாகவே நுழைந்தது. DISCOVERY OF INDIA என்ற நூலில் ஜவஹர்லால் நேரு அவர்களும் இதை குறிப்பிட்டிருக்கிறார். கேரள மற்றும் தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் வணிகம் செய்து வந்த அரபுகளின் வழியாகவே இஸ்லாம் இந்திய மண்ணுக்கு அறிமுகம் ஆகியது. வட இந்தியாவுக்கு வரும் முன்பே தென்னிந்தியாவுக்கே இஸ்லாம் முதலில் வந்தது. கேரளாவின் கொடுங்கலூரில்தான் இந்தியாவின் முதல் பள்ளிவாசல் கட்டப்பட்டது. சேரமான் பெருமான் என்ற சேர மன்னன் தன்னை தாஜுதீன் என பெயர் மாற்றிக்கொண்டு இஸ்லாத்தை தழுவினார். அவர் மெக்காவுக்கு சென்று திரும்பும் வழியில் இன்றைய ஓமானில் உள்ள 'சலாலா ' என்ற மலையடிவாரத்தில் உயிர் நீத்தார். அங்கு அவரது வரலாறும், கல்லறையும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த மன்னரின் உத்தரவின் பேரிலேயே கேரளாவின் கொடுங்கல்லூரில் முதல் பள்ளிவாசல் கட்டப்பட்டது. மாலிக் பின் தீனார் ...