முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பத்து வழிகளில் உங்கள் உறவினர்களுடன் இனிய சந்திப்பை ஏற்படுத்துங்கள் :

   முஸ்லிம்களே , பத்து வழிகளில் உங்கள் உறவினர்களுடன் இனிய சந்திப்பை ஏற்படுத்துங்கள் : 1 . உறவினர்களுடன் எப்பொழுதும் whatsapp group தொடர்பில் இருங்கள் 2. ஏதாவது ஒருநாளில் எல்லோரும் ஒன்றாக இணைய முடிவு செய்யுங்கள் 3 . பொது இடத்தை தேர்தெடுங்கள் . சமைக்கும் பொருள்களை வாங்கி செல்லுங்கள் ,பகிர்ந்து செய்யுங்கள் 4.எந்த கவலையும் இல்லாமல் அளவலாடுங்கள் உறவினர்களுடன் 5.குடும்ப பிரச்சனைகளை பேசாதிர்கள் .மற்றவர்களை பற்றியும் புறம் பேசாதிர்கள் .பொது விசயங்களை பேசுங்கள் , தொழில் ,குழந்தை வளர்ப்பு ,பள்ளிகூடம் முதலியவற்றை 6. ஒருவருக்கு ஒருவர் அன்பளிப்பு செய்யுங்கள் . 7. சிறுவர்களை பாதுகாப்பாக விளையாட செய்யுங்கள் . 8. நகைகள் மற்றும் விலைமதிப்பு மிக்க பொருள்களை தவிர்ப்பீர் .உங்களது பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் . 9.உணவு சமைத்தால் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருங்கள் 10. மீதமிருக்கும் உணவுகளை ஏழைகளுக்கு கொடுந்த்து செல்லுங்கள் . துஆ செய்ய சொல்லுங்கள் இதை நண்பர்களும் செய்யலாம் , உறவுகளை பேணுங்கள் .

வீட்டில் தனியாக இருக்கும் முஸ்லிம் பெண்கள் கவனத்திற்கு...

* வெளிக்கதவில் கண்டிப்பாக லென்ஸ் பொருத்துங்கள். மரக்கதவுக்கு முன்னால் ஒரு இரும்புக் கதவும் அமையுங்கள்.முடிந்தால் வீட்டை சுட்டி கண்காணிப்பு கேமரா பொருத்துங்கள் .நான்கு கேமரா இருக்கும் அல்லது ரெண்டு கேமரா பத்து முதல் இருவது ஆயிரம் செலவு ஆகும் . * முன் பின் அறிமுகமில்லாதவர் தண்ணீர் கேட்டால், தண்ணீர் எடுப்பதற்காக கதவைத் திறந்து வைத்து விட்டு வீட்டின் உள்ளே செல்லவே கூடாது. * ஏதேனும் அவசரத்தில் மறந்துபோய் கதவைத் திறந்து வைத்துவிட்டு பக்கத்தில் எங்காவது சென்று வந்தால், வீட்டில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா, யாராவது இருக்கிறார்களா என்று பார்த்த பிறகே கதவை மூட வேண்டும். * மின்சார பொருட்களை ரிப்பேர் செய்பவர்கள், கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் என்ற பெயரில் யாராவது, "உங்கள் கணவர் அல்லது மகன் அனுப்பினார்" என்று சொல்லிக் கொண்டு வந்தால், கதவைத் திறக்காமலேயே "பிறகு வாருங்கள்" என்று சொல்லி அனுப்பி விடுங்கள். * வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு வந்தால் சத்தமாக பேசக் கூடாது. வெளியிடங்களுக்கு செல்லும் போது, புதிய நபர்களிடம் உங்களைப் பற்றிய விவரங்களை சொல்லவே கூடாது. * எப்போதும் வீட்ட...

Youtube மூலம் ஊடக பணியை தொடங்குவது எப்படி ? பணம் சம்பாதிப்பது எப்படி?

முஸ்லிம் இளைஞர்களே ! உங்களிடம் சமுதாய சிந்தனை இருக்கா ? உங்களிடம் பேச்சாற்றல் இருக்கா ? உங்களுக்கு பணம் சம்பாதிக்கனுமா ? அனைத்துக்கும் ஒரே விடை Youtube. ஊடக துறையில் நாம் இல்லை  நாம் இல்லை என்று சொல்லிகொண்டுருந்தால் மட்டும் போதாது அதற்க்கான முயற்சியை தொடங்க வேண்டும். எப்படி? Youtubeகும் ஊடகத்துறைக்கும் என்ன தொடர்பு ? இருக்கு ,இனி எல்லாமே Youtube தான்  Youtube ஐ நாம் இணையத்தின் டிவி என்று சொல்லலாம். மிகப் பிரபலமான இந்த தளத்தில் கிடைக்காத வீடியோக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வளவு வீடியோக்கள் உள்ளன. ஒரு நிமிடத்தில் சராசரியாக 48 மணிநேர வீடியோ Youtube தளத்தில் Upload செய்யப்படுகிறது. இதை ஒரு டிவி சேனல் என்று வைத்தால் இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்படும் பத்தாவது மிகப் பெரிய சேனல் இது. இவ்வளவு பெரிய தளத்தில் சாதாரணமானவர்களும் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் நம்புவீர்களா? அது தான் உண்மை.  எப்படி என்று பார்ப்போம். முதலில் இதற்கு என்ன தேவை என்று சொல்லி விடுகிறேன்.   பேச்சாற்றல் இருக்கவேண்டும் . அவ்வளவு தான். உடன் ஒரு கேமரா இருந்தால் போதும். பேச்சாற்...

வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு போலீசார் 12 அறிவுரைகள்

வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு போலீசார் 12 அறிவுரைகளை வழங்கியுள்ளனர். பகல் நேரங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் பல்வேறு அபாயங்களை சந்திக்க வேண்டியுள்ளது. யாராவது மர்ம ஆசாமிகள் வீடுகளில் புகுந்து தனியாக இருக்கும் பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்து சென்று விடுகின்றனர். தனியாக இருக்கும் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. நகை பாலிஷ் செய்வதாக சொல்லி தனியாக இருக்கும் பெண்களிடம் மோசடி கும்பல் நகைகளை அபகரித்து செல்லும் நிகழ்வுகளும் நடக்கின்றன. வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள 12 ஆலோசனைகளை சென்னை நகர போலீசார் வெளியிட்டுள்ளனர். இது சென்னை நகருக்கு மட்டுமின்றி எல்லா ஊர்களுக்கும் பொருந்தும் எச்சரிக்கை – அறிவுறை என்றே சொல்லலாம். போலீசார் வழங்கியுள்ள 12 அறிவுரைகள்: 1. வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும்போது கதவை உள்பக்கம் பூட்டிக்கொள்ள வேண்டும். கதவை திறந்து போட்டுக்கொண்டு வீட்டு வேலைகளை செய்யக்கூடாது. 2. வீட்டு கதவின் முன்புறம் கண்டிப்பாக ”லென்ஸ்” பொருத்தினால் நல்லது. வீட்டின் மர கதவுக்கு முன்பாக கண்டிப்பாக இரும்பு கிரி...

தமிழகத்தின் கட்சிகள் !

01.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 02.அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி  03. அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ்  04.அ.இ.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  05.அ.இ. லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்  06.இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்  07.இந்திய ஜனநாயகக் கட்சி  08.இந்திய தேசிய லீக்  09.இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)  10.இந்தியப் பொதுவுடமைக் கட்சி            11.இந்தியா ஜனநாயக கட்சி  12.இந்து மக்கள் கட்சி  13.இந்து முன்னணி  14.இல்லத்தார் முன்னேற்றக் கழகம்  15.காமன்வீல் கட்சி  16.கொங்குநாடு முன்னேற்றக் கழகம்  17சென்னை மாகாண சங்கம்  18.ஜனநாயக மக்கள் கூட்டணி  19.ஜனநாயக முற்போக்குக் கூட்டணி  20.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்  21.தமிழக முன்னேற்ற கழகம்  22.தமிழக முன்னேற்ற முன்னணி  23.தமிழக ராஜீவ் காங்கிரசு  24.தமிழக வாழ்வுரிமை கட்சி  25.தமிழரசுக் கழகம்  26.தமிழ் தேசியக் கட்சி  27.தமிழ் மாநில காங்கிரசு  28.தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்...

வம்சாவழி சொல்லிதாருங்கள்

முஸ்லிம்களே , உங்களுக்கான சின்ன கேள்வி அரபியர்கள் தங்களது வம்சாவழியை தெரிந்துகொள்ள அவர்களது பெயர்களை மனனம் செய்து சொல்கிறார்கள் சிறுவர்களை அடித்தாவது மனனம் செய்ய சொல்கிறார்கள் .அவர்களது வம்சாவழி பெயர்களை ஒரு புத்தகங்களில் பேணி பாதுகாக்கிறார்கள் . இப்போ உங்களிடம் ஒரு கேள்வி ,உங்களது வம்சாவழி தொடரை சொல்லுங்கள் பார்ப்போம் ... மிஞ்சி மிஞ்சி போனா நான்கு தலைமுறையை நம்பலால்  சொல்ல முடியும் அதற்க்கு மேல் முடியாது ... அந்த நான்கு தலைமுறையையாவது உங்கள் குழந்தைகளை மனனம் செய்ய சொல்ல சொல்லுங்கள் . இன்னார் குடும்பப்பா ? இன்னார் வீடு ? என்று பட்டை பெயர் உண்டு அந்த பட்டை பேரின் விளக்கத்தையும் நம் குடும்ப வரலாறையும் சொல்லி கொடுங்கள் பிள்ளைகளுக்கு ...

முஸ்லிம் பெற்றோர்களே...!! தெரிந்துகொள்ளுங்கள்...!!

முஸ்லிம் பெற்றோர்களே...!! தெரிந்துகொள்ளுங்கள்...!! விழித்திடுக...!! கல்விகட்டணக்கொள்ளையை...!!! வென்றிடுக...!!! சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களது கல்விக்கட்டணம், தேர்வுகட்டணம் உட்பட அனைத்து விதமான தலைப்புகளிலும் கல்விக்கட்டணங்களை தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறது. மேலும், பள்ளி பராமரிப்பு, ஆசிரியர் சம்பளம் உள்ளிட்ட பல தலைப்புகளில், நிதி ஒதுக்கீடும் செய்யப்படுவதால் மாணவர்களிடமிருந்து எவ்விதமான தலைப்புகளிலும் கல்விக்கட்டணம் வச ூலிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயம் செய்த கல்விக்கட்டணம் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழி கல்விக்கு எந்த விதமான கட்டணமும் கிடையாது. ஆங்கில வழி கல்விக்கட்டணம் விவரம் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புக்கு ரூபாய் 200/- மட்டுமே ! 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புக்கு ரூபாய் 250/- மட்டுமே ! 11-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புக்கு ரூபாய் 500/- மட்டுமே ! தற்போது 2015 - 2016-ம் கல்வியாண்டு வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில் பெற்றோ...

முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பிற்கு

முஸ்லிம் பெண்கள் கல்லூரிக்கு போக வர பாதுகாப்பான முறையில் செல்கிறார்களா என்று தெரிந்துகொள்ள Android போன் களில் நமக்கு கிடைத்த சாப்ட்வேர் தான் இந்த life360 அவர்களுடன் கலந்துரையாட முடியும் குடும்பத்தில் உள்ள மட்ட்ரவர்களை நான் ஆபத்தில் இருக்கிறேன் என்று எச்சரிக்கை செய்ய முடியும் .இனிமேல் கவலை இல்லைங்க வைத்துல நெருப்ப கட்டிக்கிட்டு இருக்க வேண்டாம் .

இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் அவசியம்.நீங்களும் படிங்க .....

இது யாருக்கு தேவையோ தெரியாது இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் அவசியம்.நீங்களும் படிங்க ..... நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன? 1. உங்கள் கைதுக்கான காரணங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். 2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நீங்கள் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு 3. உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு 4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நீங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும் 5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது உங்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும் விலங்கிடலாமா? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது. கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல் கைது செய்ய...

ஆதிக்கம் ஓங்க

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... இவ்விடத்தில், பிரச்சனைகள் அனைத்துக்குமான தீர்வு இதன் மூலம் உருவாகுமா என்றொரு கேள்வியை நம்மை நோக்கி நாம் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. சாத்தியமற்ற, தேவையில்லாத செயல்பாடுகள் நம் நேரத்தையும் பொருளாதாரத்தையும் வீணாக்குவதோடு மட்டுமல்லாமல், சரியான திசை நோக்கி பயணிப்பதிலிருந்து நம்மை வெகுதூரத்துக்குக் கொண்டு சென்றுவிட்டுவிடும் அபாயமும் அதில் உள்ளது. எனவே, பயணத்தைத் துவக்கும் முன்னரே அது சரியான திசை நோக்கிய பயணம்தானா என்பதை நாம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். "அமைதியான, பயமில்லாத, மகிழ்ச்சியான வாழ்வு" என்பதே ஒவ்வொரு மனிதனின் இவ்வுலகத் தேவையாக இருக்கும். மனிதனின் இத்தேவைக்கு மிகப் பெரும் சவாலாக விளங்குபவை தீய சக்திகள்! இந்தியாவைப் பொறுத்தவரை தீய சக்திகளின் ஆதிக்கம் தலைவிரித்தாடும் சூழலில் வாழ்ந்து வருகிறோம். தீய சக்திகளின் ஆதிக்கம் ஓங்க, ஓங்க மக்களும் அத்தீய சக்திகளின் கட்டுப்பாட்டில் கட்டுண்டு, தாமும் தீயவர்களாக மாறிப்போகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை மக்களுக்கு எதிரான, நாட்டுக்கு எதிரான தீய சக்திகளில் பிரதானமானதான ...